அந்த கால பழக்கங்களும் அறிவியல் உண்மைகளும்

அந்த கால பழக்கங்களும் அறிவியல் உண்மைகளும்:

கோலம் :

அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது.

பொட்டு:

நெற்றியில் பொட்டு வைப்பது பெண்களுக்கு அழகு சேர்ப்பதோடு, பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. மேலும், ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து பேசும்போது, பேசுபவர்களின் கவனமானது  நெற்றியில் வைத்திருக்கும் பொட்டின் மீதுதான் குவியும். இதனால் தவறானப் பார்வையிலிருந்தும் பொட்டுத் தடுக்கின்றது.

தோடு :

மூளையின்  செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும்.

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி, சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது. ப்ரேசிலட், வாட்ச், காப்பு  அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

செயின், நெக்லஸ் :

கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.

வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம் படபடப்பு ,பயம் குறைகிறது.மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிபடுத்தப்படுகிறது. பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல்  :

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன்  மூலம் வெள்ளையணு  உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள்  சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.


ஒட்டியாணம்  :

ஒட்டியாணம்  அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலு வடையும்

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் மாதவிடாய் சிக்கல் சரியாகி வருவதை உணரலாம்.

கொலுசு  :

கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மெட்டி :

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும்.செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும் .

கல்யாணத்துல மேளம்,நாதஸ்வரம் எல்லாம் ஏன் வாசிக்குறாங்கனு தெரியுமா?

அதாவது,ஒரு விஷயம் செய்யும் போது தும்மினா உடனே நல்ல சகுனம் இல்லனு அந்த காலத்துல சொல்வாங்க (இந்த காலத்துலயும் தான்), கல்யாணம் ஒரு மங்களகரமான விஷயம் இல்லையா?!!! அப்போ, இது மாதிரி தும்மல் சத்தம் கேக்காமல் இருக்க,அப்புறம் சிலபேர் அப்போதான் சொந்தகதை, சோககதை, இல்ல அடுத்தவங்களை பத்தி எதாவது பேசுறது அது இதுனு இருப்பாங்க அதுலாம் காதுல விழாம  மங்களகரமான இசையின் சத்தம் மட்டும் காதுல விழணும்னு தான் இப்படி மேளம், நாதஸ்வரம் எல்லாம் வாசிக்குறாங்க.

Comments

Popular posts from this blog

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

மருதோன்றி இலை – மருதாணி இலை

நோய் அணுகா நெறி