Skip to main content

சாமுத்திரிகா லட்சணம் என்றால் என்ன?

ஒருவரின் அங்க அடையாளங்களை வைத்தே அவரின் குணம் மற்றும் செயல்பாடுகளை சொல்லும் கலைக்கு சாமுத்திரிக லட்சணம் என்று பெயர். இது ஒரு பழமையான கலையாகும்.


சாமுத்திரிகா லட்சணம் பெண்கள்

சாமுத்திரிகா லட்சணத்தின் படி ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி உடலின் எல்லா பாகங்களும் அமைவதில்லை. ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று  முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். 


சாமுத்திரிகா லட்சணத்தின் படி எந்தெந்த பாகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.



கால், பாதம்:
ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய  வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல்  அமைந்திருக்க வேண்டும்.


பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது  நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும்,  அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.


சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண்  குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

 
காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று  அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

தொடை

பெண்ணின் தொடையானது வாழைத்தண்டு போல பளபளவென இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை முடி இல்லாமல் பளிச்சென்று இருக்க வேண்டும். 


நெற்றி

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக  பரந்து இருந்தால் சிறப்பு. நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது  3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.


காது

காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும்  குறுகலாக இருக்கும்.

கைவிரல்

பெண்ணின் கைகள் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் நீண்டு அழகாக இருக்க வேண்டும். 


கழுத்து

பெண்ணின் முகமானது முழு நிலவுபோல ஒளிமிக்கதாக இருக்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு இருக்க வேண்டும். பெண்ணின் பல் வரிசையானது முத்துக்களைக் கோர்த்து வைத்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.


கண்கள்

பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்றும் இருக்க வேண்டும். புருவமானது வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக உள்ளதா அல்லது மஞ்சளாக உள்ளதா என்று பார்க்க  வேண்டும். உருண்டு திரண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள். வளையக்கூடிய  புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.


கூந்தல்

பெண்களின் கூந்தல் நீண்டு கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் பூவின் மணம் வீச வேண்டும். ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல்  அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.பெண்களின் கூந்தல் கருங்கூந்தலாக இருக்க வேண்டும். அவங்களுக்கு இருக்கிற தலைமுடி மாதிரிதான் வாழ்க்கை அமையுமாம். கோரை முடி குடியை கெடுக்கும் சுருட்டை முடி சோறு போடும் என்பார்கள். கூந்தலில் மலர் மணம் வீசினால் அந்த பெண்கள் இயற்கையிலேயே ரொம்ப அற்புதமானவர்கள். தலைமுடி எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை அமைதியாக மென்மையாக போகும்னு சொல்லுவாங்க. தலைமுடி மொர மொரப்பா இருந்தா அவங்க வாழ்க்கை கரடுமுரமாக இருக்குமாம். கஷ்டப்பட்டு உழைத்துதான் சாப்பிட வேண்டியிருக்குமாம்.


வாசம்

பெண்களின் உடலில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை,  தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். 


மூக்கு

மூக்கு நீண்டு உயர்ந்து இருக்க வேண்டும். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூர்மையாக இருந்தால் அவர்கள் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. 


பெண்களின் காது அமைப்பு

சீரான செதுக்கியது போல மூக்கு கொண்டவர்களுக்கு வாழ்க்கை சீராக இருக்கும். குடை மிளகாய் போல மூக்கு கொண்டவர்கள் கொஞ்சம் பயங்கரமானவர்களாக இருப்பார்கள். காது அமைப்பு குறுகியிருந்தால் மனதும் சிந்தனையும் குறுகலாக இருக்குமாம். பரந்த காதுகளை கொண்டவர்களுக்கு பரந்த மனதாக இருக்குமாம்.

நெற்றி வடிவம்

நெற்றி மேடாகவும் நெற்றியில் 2 அல்லது 3 கோடுகளும் இருந்தாலும் கோடுகள் இருந்தால் சிந்தனைவாதிகளாகவும் அறிவாளிகளாவும் இருப்பார்கள்.

நிலவு போன்ற முகம்

பெண்களோட கண்கள் சிவந்து நீண்டு இருக்கணுமாம். அடிக்கண் அகன்று மாவடுபோல் இருக்கணும். விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். புருவம் வில்லைப்போன்று வளைந்திருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். முகத்திலுள்ள மூக்கின் நீளம், கண்களின் இருப்பிடம் மற்றும் தாடையின் நீளம் என அளவெடுத்து செய்தது போல இருக்கணும்.

செதுக்கிய வடிவ அமைப்பு

நவகிரகங்களும் நன்றாக இருந்தால் முக அமைப்ப அற்புதமாக இருக்கும். சந்திரன், சுக்கிரன் சரியாக இருந்தால் பெண்கள் அழகாக இருப்பார்கள். அங்க லட்சணங்கள் அம்சமாக இருக்கும். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு போன்றவை சாமுத்ரிகா லட்சணத்திற்கு ரொம்ப முக்கியம். நிலவு ஒரு பெண்ணாகி உலவு கின்ற அழகோ என்று பாடியிருப்பார்கள் பெண்களின் முகம் நிலவு போல பளிச்சென்று இருந்தால் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்


இவையெல்லாம் சாமுத்திரிகா லட்சணம் என்று நமது முன்னோர்களால் நூல்களில் குறிபிடப்பட்டுள்ளது.






Comments

Popular posts from this blog

நோய் அணுகா நெறி

நோய் அணுகா நெறி: திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம் இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம் முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம் ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம் நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில்  "மகத்துவம் பொருந்திய குறுமுனி  அகத்தியரின் மிகச்சிறந்த சீடர் தேரையரால்"ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணுகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன. 1. பசும் பால் அருந்த வேண்டும் (One should drink cow’s milk). 2. வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water). 3. இடது கையை தலைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும்...

மருதோன்றி இலை – மருதாணி இலை

மருதோன்றி இலை – மருதாணி இலை: மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும், அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது. எகிப்தின் மம்ம்யில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து தயார் செய்யப்படிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம் மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக பலலாயிரக்கனகான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்ட வரலாறு உண்டு. இதைக்கொண்டு இயற்கை நிறங்கள் ஓவியத்திற்கு தயார் செய்யப்பட்டது. முடி கரங்கள், கால்கள் அழுகு படுத்தப்பட்டன. இது ஒரு சிறந்த தோல் காப்பான். மருதோன்றி இலையைப் பற்றி அறியாத  இந்திய பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.. இலை பித்...

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்: 1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். 2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும். 3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும். 4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும் பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வல...