Skip to main content

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

 











நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக்கூடிய ரகசியங்களும் உள்ளடங்கி இருக்கும். நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதை எதற்காக செய்கிறோம்? என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை! இதனால் பலரும் மூடநம்பிக்கையாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லா விஷயங்களிலும் மூட நம்பிக்கை இருப்பதில்லை. நம்பிக்கையை மூலதனமாக கொண்டவர்கள் வாழ்க்கையில் என்றுமே தோற்பதில்லை எனவே காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட சொல்ல ஏன் நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர்? காலை மடக்கி சாப்பிட உட்காருவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை தான் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.


இப்போது பெரும்பாலான மக்கள் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு உட்கார்ந்து சாப்பிடுவது இல்லை! இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சேரில் அமர்ந்து சாப்பிடுவது அல்லது படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது போன்றவற்றை பலரும் கடைபிடித்து வருகின்றனர். வெறும் தரையில் அல்லது பாயில் காலை மடக்கி சம்மணம் போட்டு கொண்டு சாப்பிடுவதால் நம் உடம்பில் இடுப்புக்கு கீழே இருக்கும் பகுதியில் ரத்த ஓட்டம் குறையும்.

இடுப்புக்கு மேலே இருக்கும் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சக்தியும், ஆரோக்கியமும் உயருகிறது. இடுப்புக்கு மேலே இருக்கும் பகுதியில் முக்கிய உறுப்புகளும் உண்டு. கணையம், சிறுநீரகம், நுரையீரல், மூளை, கண், காது என்று ஒரு மனிதனுக்கு தேவையான முக்கிய உறுப்புகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்கும் பொழுது தான் பிராண சக்தியும் அதிகரிக்கிறது.


சாப்பிடும் போது முக்கிய உறுப்புகளுக்கு தேவையான சக்தியை காலை மடக்கி அமர்ந்தால் தான் பெற முடியும். முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்கு கீழே சென்றால் சரியான ஜீரணம் நடைபெறுவது இல்லை. இதனால் அஜீரண கோளாறுகள் அதிகரிக்கத் துவங்கும். சாப்பிடும் போது முழு சக்தியும் வயிற்று பகுதிக்கு கிடைத்தால் தான் ஜீரணமும் சரியாக நடைபெறும். எனவே சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக்கு கீழே முழு சக்திகள் செல்லாமல் முழுமையாக வயிற்றுக்கு மேல் இருக்கும் பகுதிகளில் ரத்த ஓட்டம் பாய்கிறது. இதனால் ஜீரணமும் சரியாக நடைபெறுகிறது.


சாப்பிடும் பொழுது தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும் வலுப்பெறுகிறது. சாப்பிடும் போது நிதானமாக எல்லா பருக்கைகளையும் வாயிலேயே வைத்து கூழாக்கி பின்னர் மென்று உள்ளே தள்ள வேண்டும். முழு பருக்கைகளாக உள்ளே தள்ளி அவசர அவசரமாக பாதி மென்று சாப்பிடும் பொழுது தேவையில்லாத நோய்களும் நம்மை தாக்குகிறது. எனவே சாப்பிடக்கூடிய அந்த பத்து நிமிடமாவது எந்த விதமான சிந்தனைகளும் இல்லாமல், தங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக அமைதியாக, நிதானமாக, பொறுமையாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.



சாப்பிடும் உணவானது அதிக சூடு இல்லாமல், குளிர்ச்சியாகவும் இல்லாமல் மிதமான சூட்டில் இருப்பது மிகவும் நல்லது. சாப்பிடும் பொழுது பேசிக் கொண்டே சாப்பிட்டால் உணவு பருக்கைகள் உள்நாக்கின் உள்ளே மாட்டிக் கொள்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. அதனால் தான் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று கூறப்படுகிறது. சாப்பிடும் பொழுது சாப்பிடும் சாப்பாடு நம் உடம்பில் ஒட்ட வேண்டும் என்றால் கைகளை தரையில் வைக்கவும் கூடாது. சிலர் இதை செய்வது உண்டு. எனவே கைகளை தரையில் போட்டு அழுத்திக் கொண்டு சாப்பிடாமல் சரியான முறையில் சாப்பிடுங்கள்.

Comments

Popular posts from this blog

நோய் அணுகா நெறி

நோய் அணுகா நெறி: திண்ண இரண்டுவளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால் நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கில் போமே பிணி. பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகலில் புணரோம் பகலில் துயிலோம் பயோதரமும் மூத்த வேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம் இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம் இடது கையில்படு மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம் முதல் நாளில் கறி அமுதெனினும் உண்ணோம் ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம் நமனார்க்கு இங்கே ஏது இவை நாமிருக்கும் இடத்தே கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில்  "மகத்துவம் பொருந்திய குறுமுனி  அகத்தியரின் மிகச்சிறந்த சீடர் தேரையரால்"ஒவ்வொருவரும் தன் உடலில் நோய் அணுகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தெளிவாய்க் கூறப்பட்டுள்ளன. 1. பசும் பால் அருந்த வேண்டும் (One should drink cow’s milk). 2. வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (One should take oil bath in warm water). 3. இடது கையை தலைக்கு கீழே வைத்து படுக்க வேண்டும்...

மருதோன்றி இலை – மருதாணி இலை

மருதோன்றி இலை – மருதாணி இலை: மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும், அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது. எகிப்தின் மம்ம்யில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து தயார் செய்யப்படிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம் மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக பலலாயிரக்கனகான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்ட வரலாறு உண்டு. இதைக்கொண்டு இயற்கை நிறங்கள் ஓவியத்திற்கு தயார் செய்யப்பட்டது. முடி கரங்கள், கால்கள் அழுகு படுத்தப்பட்டன. இது ஒரு சிறந்த தோல் காப்பான். மருதோன்றி இலையைப் பற்றி அறியாத  இந்திய பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.. இலை பித்...

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:

108 – மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்: 1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். 2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும். 3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும். 4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும் பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வல...